
நாற்பத்தி ஐந்து கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றிய பூமி…
முதல் உயிரினத்தை பெற பத்து கோடி ஆண்டுகள் போரடிய வரலாறு…
புவியின் ஆசை பல்லாயிரம் கட்டுப்பாட்டான உயிரினங்களை படைத்து தன்னை சிறப்பாய் கட்டமைத்த புத்திசாலித்தனம்….
இயற்கை விதிக்கு கட்டுப்படாத டைனோசரைக்கூட சுவடில்லாமல் செய்த நேர்மை…
மனித இனத்தையும் பெற்றெடுத்த பேராற்றல்….
அறுபது இலட்சம் ஆண்டுகள் மனித இனம் பூமியில் எதார்த்தமாய் இயற்கையின் கோட்பாட்டில் வாழ்ந்த வாழ்வியல்….
கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளாய் மனிதன் இயற்கை விதியை மீறிய வினை…
பூமியை மாசுப்படுத்திய அறமின்மை…
பிரயாச்சித்தமாய் நெல்சன் என்ற மனிதநேயம் மீண்டும் பூமியை மாசிலிருந்து மீட்டெடுக்க முயற்சி எடுத்த ஏப்ரல் 22, ஐம்பதாண்டுகளாய் போராடும் கடமையுணர்வு…
ஆனாலும் பூமியை பாது்காக்கும் ஒஷோனையே பதம்பார்க்கும் விஞ்ஞானம்…
பூமியே மனிதன் நிலைக்கண்டு கலங்கும் தாயுள்ளம்….
ஆதி மனிதனை மீட்டெடுக்க போராடும் பூமி….
குறைந்தபட்சம் பூமியின் விதியை கடைபிடியுங்கள் மீண்டும் மாசுபாடற்ற புவியை மீட்டெடுக்க அது வெகுவாக உதவும்…
மனித இனமும் இன்னும் பல இலட்ச ஆண்டுகள் வாழ வழிவகுக்கும்..
அனைவருக்கும் ஐம்பதாவது பூமி தின நல்வாழ்த்துக்கள்….
நன்றி ,
பிரேமா நாகராஜன்.
கத்தார்